உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு வாலிபர் கைது

புதுச்சேரி : பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது உறுவையாறு நத்தமேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் 21, என்பவர் மதுபோதையில் மங்கலம்-உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை