உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

அரியாங்குப்பம்: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் ஆப்ரேஷன் திரிசூல் மூலம், ரவுடிகளின் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் சந்திப்பில், வாலிபர் கத்தியுடன் நின்று கொண்டு, பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து, விசாரித்தனர்.அதில், அரியாங்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன், 33, என தெரியவந்தது. அவர் வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, நேற்று கோர்ட்டில், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை