உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / குல்தீப், அபிஷேக் எதிர்பார்ப்பு * ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு

குல்தீப், அபிஷேக் எதிர்பார்ப்பு * ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரர், வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் குல்தீப், அபிஷேக், ஸ்மிருதி மந்தனா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாத விருதுக்கு இந்திய 'டி-20' அணி துவக்க வீரர் அபிஷேக் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயின் பிரியன் பென்னெட் என மூன்று வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.சமீபத்திய ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் 7 போட்டியில் 314 ரன் எடுத்த அபிஷேக், தொடர் நாயகன் விருது வென்றார். சுழலில் அசத்திய குல்தீப் 17 விக்கெட் சாய்த்தார். பென்னெட் 9 'டி-20' போட்டியில் 497 ரன் குவித்தார்.சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் உள்ளிட்டோர் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 சதம் உட்பட, கடந்த மாதம் 4 ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி, 308 ரன் விளாசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ