பள்ளி வேன் விபத்து 11 பேர் காயம்
அரியலுார்:தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதியதில் மாணவர்கள், ஆசிரியர் என, 11 பேர் காயமடைந்தனர்.அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தில், என்.ஆர்., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் 30 பேர், நேற்று பள்ளி வேனில் பூம்புகார் சுற்றுலா சென்றனர்.மணகெதி சுங்கச்சாவடி அருகே வேன் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சுங்கச் சாவடி ஜெனரேட்டர் அறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆசிரியர், மாணவ - மாணவியர் என, 11 பேர் காயமடைந்தனர்.போலீசார், மணகெதி கிராம மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.