உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளி வளாகத்திலேயே 3 மாணவர்களை கடித்த தெருநாய்

அரசு பள்ளி வளாகத்திலேயே 3 மாணவர்களை கடித்த தெருநாய்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் மூன்று பேரை, பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த தெரு நாய் துரத்தியது.மூன்று பேருக்கும் கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாய் கடித்தது. மூன்று மாணவர்களையும் ஆசிரியர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.பள்ளி வளாகத்தில் வெறிநாய் போன்றுசுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.அதேபோல சிங்க பெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் கிராமத்தில், நேற்று முன் தினம் மேய்ச்சலுக்கு சென்ற வெள்ளாட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில், சின்ராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை