உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மண் சாலையாக உருக்குலைந்த தார்ச்சாலை

மண் சாலையாக உருக்குலைந்த தார்ச்சாலை

பவுஞ்சூர்:மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- மரக்காணம் இடையே திட்டத்தை செயல்படுத்துகிறது. இச்சாலை விரிவாக்க திட்ட பணிகளுக்காக, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.இந்நிலையில், சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்கள் மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், அரசு அனுமதியுடன் மண் எடுத்து வரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது. பவுஞ்சூர் அடுத்த இரணியசித்தி கிராமத்தில், செய்யூர் - பவுஞ்சூர் சாலையோரத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரியில் இருந்து சிதறும் ஏரி மண் சாலையில் குவிந்து காணப்படுகிறது.இரணியசித்தி ஏரியின் மண் களிமண் தன்மை உடையதால், சாலையில் ஒட்டிக்கொண்டு இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.மேலும், மழை பெய்தால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் குவிந்துள்ள மண்ணில் வழுக்கி, விபத்தில் சிக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை