வீட்டின் பூட்டை உடைத்து பேரமனுாரில் திருட்டு
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் விவேகாந்தா நகரை சேர்ந்தவர் கோபி, 41. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி, விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலுாருக்கு சென்றார்.விடுமுறை முடிந்து, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7,000 ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது.இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.