உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தவறி விழுந்த பெயின்டர் பலி

தவறி விழுந்த பெயின்டர் பலி

செய்யூர் : செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 30; பெயின்டர். நேற்று நாங்களத்துாரைச் சேர்ந்த சதாசிவம் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.சுற்றுப்புற சுவரில் சாரம் அமைத்து பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யூர் போலீசார் உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை