உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், வரும் 19ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, எரிவாயு வினியோகம் குறித்தான தங்களது குறைகளை நிவர்த்தி செய்து பயன்பெறலம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ