உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரும் 20ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

வரும் 20ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம், வரும் 20ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், எரிவாயு நுகர்வோர்களுக்கு உள்ள குறைகளை அறிய, எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கும் இக்கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், வரும் 20ம் தேதி, காலை 11:00 மணிக்கு நடக்கிறது. எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ