மாமல்லை நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு தாமதம்
மாமல்லபுரம், மாமல்லபுரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டவர், பொறுப்பேற்பது தாமதமாகிறது.மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி பகுதியை, தமிழக அரசு கடந்த மாதம், இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்தியது.இந்நகராட்சிக்கு கமிஷனர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் நியமிக்கப்பட வேண்டும். இதையடுத்து, நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதா ஸ்ரீயை, மாமல்லபுரம் நகராட்சி கமிஷனராக நியமித்து, நகராட்சி நிர்வாக கமிஷனர் சிவராசு, கடந்த பிப்., 25ம் தேதி உத்தரவிட்டார்.ஆனால், தற்போது வரை கமிஷனர் பொறுப்பேற்காமல், தாமதமாகிறது. இதனால், தற்போதைய செயல் அலுவலர், நிர்வாக பணிகளில் முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.