உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி

மாம்பாக்கத்தில் லாரி ஏறி பெயின்டர் பலி

திருப்போரூர், கல்பாக்கம் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. பெயின்டரான இவர், மாம்பாக்கம் பகுதியில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு 8:30 மணியளவில், மாம்பாக்கத்தில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் அருகே, சாலை ஓரத்தில் துாங்கினார். அப்போது அங்கு, கட்டுமான பொருட்கள் விற்பனை கடை சார்ந்த மினி லாரியை, ஓட்டுநர் சிட்டிபாபு என்பவர் பின்னோக்கி இயக்கியுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக மினி லாரியின் பின்புற சக்கரத்தில் சுரேஷ் தலை சிக்கி நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சுரேஷ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ