உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தென்னங்கீற்று நிழற்குடை பயணியர் வேண்டுகோள்

தென்னங்கீற்று நிழற்குடை பயணியர் வேண்டுகோள்

மதுராந்தகம், மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ் 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நாள்தோறும், 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.மழை மற்றும் வெயில் காலங்களில் இருந்து பயணியரை பாதுகாக்கும் வகையில், தற்காலிக பயன்பாட்டிற்காக, தகர 'ஷீட்'டுகளால் நிழற்குடை அமைக்கப்பட்டது.தற்போது, வெயில் காலம் ஆரம்பித்துள்ளதால், தகர ஷீட் நிழற்குடை பகுதியில் அனல் வீசுவதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.அதனால், அப்பகுதியில் உள்ள மரத்தடி நிழலில் பேருந்துக்காக காத்து நிற்கின்றனர்.எனவே, மரத்தடி பகுதியில், தென்னங்கீற்றால் நிழற்குடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் சூடாக வருவதால், தொட்டிக்கும் தென்னங்கீற்று கூரை அமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !