மேலும் செய்திகள்
கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம்
26-Feb-2025
முதியவர் சாவு
22-Feb-2025
காட்டாங்கொளத்துார், காட்டாங்கொளத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று அதிகாலை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து போலீசார் மற்றும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அந்த உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், விபத்தில் இறந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த வீரமணி,28, என்பதும், சென்னை போரூர் பகுதியில் தங்கி 'பிளிங்கிட்' என்ற நிறுவனத்தில் காய்கறி 'டெலிவரி' செய்யும் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.காட்டாங்கொளத்துார் பகுதியில் சாலையைக் கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததும் தெரிந்தது.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.
26-Feb-2025
22-Feb-2025