உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் உயிரியல் பூங்காவை ஆர்வமுடன் ரசித்த 15,000 பேர்

வண்டலுார் உயிரியல் பூங்காவை ஆர்வமுடன் ரசித்த 15,000 பேர்

தாம்பரம்:விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவை, 15,000 பேர் கண்டு ரசித்தனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு அதிக பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போல், காலை முதல் பார்வையாளர்கள் குடும்பம் குடும்பாக வரத் துவங்கினர். காலை, 11:00 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.அந்த வகையில் நேற்று மட்டும், 15,000 பேர் வருகை புரிந்து யானை, சிங்கம், வெள்ளைப் புலி, பறவை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை