மேலும் செய்திகள்
ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
21-May-2025
குரோம்பேட்டை:குரோம்பேட்டை, பாரதிபுரம் வள்ளுவர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மூர்த்தி. தள்ளுவண்டியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை, வியாபாரத்திற்கு பழம் வாங்க, மகனுடன் கோயம்பேடு சந்தைக்குச் சென்றார். அப்போது, மூர்த்தியின் மனைவி சுமதி, 42, மட்டும், வீட்டில் தனியாக துாங்கிக் கொண்டிருந்தார்.அதிகாலை, 4:30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகையை திருடியதுடன், தோடு, சுமதியின் அரை சவரன் செயினை அறுத்து தப்பினர். சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
21-May-2025