/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அந்தியோதயா அன்னயோஜனா திட்டம்; 31க்குள் கைரேகை பதிய வலியுறுத்தல்
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம்; 31க்குள் கைரேகை பதிய வலியுறுத்தல்
செங்கல்பட்டு; அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ளோர் அனைவரும், ரேஷன் கடைக்கு சென்று, வரும் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொது வினியோகத்திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வாயிலாக, இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.இந்த ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், வரும் 31ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்கு சென்று, கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.மாவட்டத்தில், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ள, 7,07,337 பேரில், 5,41,609 பேர் பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள், வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.