மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
குரோம்பேட்டை:சிட்லப்பாக்கம், வைத்தியலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் யோகேஷ், 30. தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் காரில் வேலைக்கு சென்ற யோகேஷ், இரவு 11:30 மணிக்கு, குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தில் இருந்து குதித்து, படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். அவ்வழியாக சென்றோர், அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.