விபத்தில் கொத்தனார் பலி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பெரியபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 38; கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விஜயகுமார், செங்கல்பட்டில் வேலையை முடித்துவிட்டு, நேற்று இரவு 7:50 மணியளவில், செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். மூவரசன்பேட்டை அரு கில் வந்த போது, அப்பகுதியில் வயலில் நெல் அறுவடை பணி முடித்துவிட்டு, நெடுஞ்சாலையில் ஏறிய அறுவடை இயந்திரம், விஜயகுமார் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விஜயகுமார் உடலை மீட்டு, செங்க ல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.