உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல்லுக்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

நெல்லுக்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் மூலமாக, திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில், மழையில் சிக்கி சேதமடைந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நெல் சேதமடைந்து ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய, வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தில் தொடங்கி, அக்டோபர் மாதத்தில் முடிவடையும் காலம், 'காரீப்' பயிர்கள் என அழைக்கப்படுகிறது. அதன்படி, காரீப் பருவத்தில் நெல் பயிர் காப்பீடு செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள். நெல் காப்பீடாக, ஒரு ஏக்கருக்கு, 726 ரூபாய் செலுத்த வேண்டும். தேவையான ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கி புத்தகம், ஆதார் எண், தொலைபேசி எண்ணுடன், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில், பயிர் காப்பீடு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையம், 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்' அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு காப்பீடு செய்து, திட்ட வழிமுறைகளின்படி பயன் பெறலாம். - நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை