உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதைப்பொருள் விழிப்புணர்வு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

போதைப்பொருள் விழிப்புணர்வு தன்னார்வலர்களுக்கு அழைப்பு

செங்கல்பட்டு:போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்த, தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.செங்கல்பட்டு மாவட்டத்தில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதை பொருட்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த, அனுபவம் மற்றும் விருப்பம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகளை, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மொபைல் போன் எண்: 63826 13182ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை