செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாமல் அவதி
செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் செயல்படுகிறது.குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தல், பட்டா பெயர் மாற்றம், நில அளவைக்கு பதிவு செய்தல் என, பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பல ஆண்டுகளாக தாசில்தார் அலுவலக வளாகத்தில், குடிநீர் வசதி இல்லாததால், அலுவலகத்திற்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால், தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.