மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
21-Dec-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு, இன்று நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான ஓ.எம்.ஆர்., தேர்வு, இன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடக்கிறது. அதன் பின் எழுத்து தேர்வு, மாலை 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் மேல் நிலைப்பள்ளி, லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களுக்கு காலை 8:30 மணிக்கு, தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். பிற்பகல் தேர்வுக்கு 2:00 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் வரும் போது ஆதார், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் 'ஒரிஜினல்' கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
21-Dec-2025