புகார் பெட்டி...
நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் கொசு தொல்லையால் அவதிநந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட கவுதம புத்தர் தெரு மற்றும் பவானி அம்மன் கோவில் தெருவில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதியடைந்து வருகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் இப்பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கொசு மருந்து அடிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.கிருஷ்ணன்,அருள் நகர், நந்திவரம்.