உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கையில் இன்று கூட்டுறவு வார விழா

 செங்கையில் இன்று கூட்டுறவு வார விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான 72வது அனைத்திந்திய கூட்றவு வார விழா, கலெக்டர் சினேகா தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி கலையரங்கில் இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ --- மாணவியருக்கு பரிசுகள் வழங்க உள்ளார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் விழாக்குழு தலைவர் நந்தகுமார் வரவேற்கிறார். விழாவில், எம்.பி., --- எம்.எல்.ஏ., உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்றவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ