மாவட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ். வெங்கடாசலம், பொறுப்பேற்றுக் கொண்டார்.செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கா. சாகிதா பர்வீன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எஸ். வெங்கடாசலத்தை, செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக எஸ். வெங்கடாசலம், நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார்.