உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது

மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஒருவர் மது போதையில் தகராறு செய்ததாக தெரிகிறது.இரவு ரோந்து பணியில் இருந்த மானாமதி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரசூல், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.அப்போது, அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே, அவரை காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்தனர்.அதில், அகரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 38, என்பது தெரியவந்தது. இதையடுத்து, மானாமதி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை