உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலைநகரில் நாளை மின் குறை தீர்வு கூட்டம்

மறைமலைநகரில் நாளை மின் குறை தீர்வு கூட்டம்

மறைமலைநகர்:மறைமலைநகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், மாம்பாக்கம், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் உள்ளிட்ட உப மின் கோட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகத்தில் உள்ள மின் நுகர்வோருக்கு குறை தீர்க்கும் கூட்டம், மறைமலைநகர் மின் கோட்ட அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.முற்பகல் 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமில், நுகர்வோர் மின்சாரம் கணக்கீடு மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மனு அளித்து, தீர்வு காணலாம் என, மறைமலைநகர் மின் கோட்ட செயற்பொறியாளர் மாணிக்கவேல் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை