உள்ளூர் செய்திகள்

லாரி மோதி ஊழியர் பலி

சிங்கபெருமாள்கோவில:விருதுநகர் மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 24, சிங்கபெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் தங்கி உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்த வந்தார்.நேற்று மதியம் சிங்கபெருமாள் கோவிலில் திருக்கச்சூர் சாலையில் 'பஜாஜ் பிளாட்டினா' டூ- வீலரில் உணவு டெலிவரி செய்ய சென்றார்.அப்போது கேரளாவில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜித்து, 61, என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை