உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், 21ம் தேதி, நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 21ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி