செங்கையில் 30ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு: செ ங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை; செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.