உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.இதேபோல், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப்- கலெக்டர் நாராயணசாமி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.இந்த கூட்டங்களில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி