மேலும் செய்திகள்
மாணவி பலாத்காரம் மேலும் இருவர் கைது
10-Dec-2024
மேல்மருவத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, தச்சூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.மாணவியுடன், பத்தாம் வகுப்பு பயிலும், தச்சூர் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதியில் பாலிடெக்னிக் கல்லுாரி பயிலும் ஒரு மாணவர் உட்பட நான்கு பேர், கடந்த மாதம், மாணவியிடம், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அதை வீடியோவில் பதிவு செய்து, மாணவியை மிரட்டி உறவு கொண்டுள்ளனர். பின், வீடியோவை பிற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.நேற்று முன்தினம் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட 4 மாணவர்களை போக்சோ வழக்கில் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.
10-Dec-2024