உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகளுக்கு 31ல் குறைதீர்வு கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 31ல் குறைதீர்வு கூட்டம்

செங்கல்பட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன், தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ