20 பயனாளிக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
செங்கல்பட்டு,:கீரப்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 20 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை, அமைச்சர் அன்பரசன், நேற்று வழங்கினார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று நடந்தது.கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்ல வீடு, பட்டா மாற்றம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 365 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.அதன் பின், கீரப்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 20 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.