உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது

மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவர் கைது

நீலாங்கரை: மனைவியை கொலை செய்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கணவரை, போலீசார் கைது செய்தனர். நீலாங்கரையை சேர்ந்த தனசேகர் மனைவி அகல்யா, 36. இவரை, 2019ம் ஆண்டு, தனசேகர் கொலை செய்தார். இவ்வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனசேகர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால், நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. நீலாங்கரை தனிப்படை போலீசார், வெளியூரில் தலைமறைவாக இருந்த தனசேகரை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை