அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் 30க்குள் கைரேகை பதிய அறிவுறுத்தல்
செங்கல்பட்டு:அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைவரும், ரேஷன் கடைக்கு சென்று வரும் 30ம் தேதிக்குள் கைரேசை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் வாயிலாக இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.இந்த ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், வரும் 30ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்குச் சென்று, கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.மாவட்டத்தில், அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டு ரேஷன் அட்டைகள் உள்ள 6 லட்சத்து 87 ஆயிரத்து 398 பேரில், 5 லட்சத்து 75 ஆயிரத்து 442 பேர் பதிவு செய்துள்ளனர்.மற்றவர்கள் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தாலுகா மொத்த நபர்கள் பதிவு செய்தோர் பதிவு செய்யாதோர்செங்கல்பட்டு 1,05,336 88,368 16,968மதுராந்தகம் 1,75,232 1,44,736 23,779செய்யூர் 1,42,134 1,18,355 30,496திருக்கழுக்குன்றம் 1,05,774 89,475 16,299திருப்போரூர் 80,877 68,780 12,097வண்டலுார் 78,045 65,728 12,317மொத்தம் 6,87,398 5,75,442 1,11,956.