மேலும் செய்திகள்
வேளாண் இணை இயக்குநர் நியமனம்
21-Nov-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக, பிரேம்சாந்தி என்பவர், பொறுப்பேற்றுக்கொண்டார்.செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனராக அசோக் பணிபுரிந்தார். அவர், வேளாண்மை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.அதன்பின், கடலுார் மாவட்டத்தில், வேளாண்மை துணை இயக்குனராக பணியாற்றிய பிரேம்சாந்தி, இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில், வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
21-Nov-2024