கத்தியை காட்டி மிரட்டி பணம், மொபைல் ஆட்டை
மதுராந்தகம்:படாளம் காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ், 20. அவரது நண்பர் சிவா, 22.இருவரும், நேற்று முன்தினம் இரவு, மாமண்டூர் அருகே தனியார் உணவகத்தில் உணவு பார்சல் வாங்கி, பழையனுார் டீச்சர் நகர் அருகே, சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.அப்போது, பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் மற்றும் சந்தோஷ், சிவா வைத்திருந்த, தலா 15,000 ரூபாய் மதிப்புள்ள விவோ மற்றும் ரெட்மி மொபைல் போன்களை பறித்துக் கொண்டு தப்பினர்.இது குறித்து, சந்தோஷ் அளித்த புகாரின்படி, படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.