மேலும் செய்திகள்
2024ல் ரயிலில் அடிபட்டு 112 பேர் உயிரிழப்பு
13-Jan-2025
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் -சூனாம்பேடு நெடுஞ்சாலையில், வெங்கடேசபுரம் பகுதியில் செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கேட் எண்.75 உள்ளது.அச்சிறுபாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை முதல் வரும் 23 வரை, இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், தொழுப்பேடு மற்றும் சோத்துப்பாக்கம், மதுராந்தகம் வழியாக சூனாம்பேடு, செய்யூர் செல்லலாம்.
13-Jan-2025