உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்

அச்சிறுபாக்கத்தில் பராமரிப்பு பணி 4 நாட்கள் ரயில்வே கேட் மூடல்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் -சூனாம்பேடு நெடுஞ்சாலையில், வெங்கடேசபுரம் பகுதியில் செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளத்தை கடக்கும் கேட் எண்.75 உள்ளது.அச்சிறுபாக்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை முதல் வரும் 23 வரை, இரவு 9:30 மணி முதல் நள்ளிரவு 01:00 மணி வரை, ரயில்வே கேட் முழுதும் மூடப்படும்.பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், தொழுப்பேடு மற்றும் சோத்துப்பாக்கம், மதுராந்தகம் வழியாக சூனாம்பேடு, செய்யூர் செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை