உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஜி. எஸ். டி., சாலை யோரம் உள்ள தாங்கல் ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சிங்கபெருமாள் கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி