உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி

சாலையை ஆக்கிரமித்த விபத்து வாகனங்கள் மதுராந்தகத்தில் வாகன ஓட்டிகள் அவதி

மதுராந்தகம்,:விபத்தில் சிக்கிய வாகனங்கள், மதுராந்தகம் புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மதுராந்தகம் நகர பகுதியில் இருந்து சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், புறவழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்நிலையில், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கும் வாகனங்கள் மற்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, இந்த புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளனர்.அதனால், விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, காவல் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி