உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இறைச்சி வியாபாரத்திற்காக ஊராட்சி ஆபீஸ் ஆக்கிரமிப்பு

இறைச்சி வியாபாரத்திற்காக ஊராட்சி ஆபீஸ் ஆக்கிரமிப்பு

கடலுார்:கூவத்துார் அடுத்த கடலுாரில், ஊராட்சி அலுவலக வளாகம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், துணை சுகாதார நிலையம் ஆகியவை இயங்குகின்றன.மேல்நிலை குடிநீர் தொட்டியும் உள்ளது. இவ்வளாகம், பிரதான சாலையை ஒட்டியுள்ளது. வேறு இடத்தில் கோழி இறைச்சி வியாபாரம் செய்தவர், தற்போது ஊராட்சி அலுவலக வளாக பகுதியில், இறைச்சி வியாபாரம் செய்கிறார்.இவ்வியாபாரம் செய்ய, உள்ளாட்சி பிரதிநிதிகளும், வியாபாரிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, அலுவலக வளாகத்திற்குள், சுற்றுச்சுவரை ஒட்டி கடை அமைப்பதற்கான ஏற்பாடும் நடக்கிறது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டரிடம், இன்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்த அப்பகுதியினர், அங்கு இறைச்சி வியாபாரத்திற்காக ஆக்கிரமிப்பதை, அதிகாரிகள் தடுக்குமாறு வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி