உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்கூட்டரில் கார் மோதி படப்பையில் ஒருவர் பலி

ஸ்கூட்டரில் கார் மோதி படப்பையில் ஒருவர் பலி

படப்பை:படப்பை, ஆதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 46. ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியர். 'டி.வி.எஸ்., என்டார்க்' ஸ்கூட்டரில் நேற்று, பிரியாணி வாங்க சென்று கொண்டிருந்தார்.வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை அருகே, ஆரம்பாக்கம் கூட்டுசாலை சந்திப்பை கடந்தபோது, அந்த வழியே சென்ற 'இன்னோவா' கார், ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன், அதே இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை