உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி

மறைமலைநகரில் ரயில் மோதி ஒருவர் பலி

மறைமலைநகர்: மறைமலைநகர் ரயில் நிலையம் அருகில், ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு பயணியர் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், அந்த உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்தி விசாரணையில், இறந்த நபர் மண்ணிவாக்கம், புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த மணிகண்டன்,44, என தெரிந்தது. மணிகண்டன் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை