உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை

அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை

சித்தாமூர்:வன்னியநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இரும்பு, 'கேட்' அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அருகே வன்னியநல்லுார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நுழைவாயில் பகுதியில், இரும்பு 'கேட்' இல்லாததால், பகல் நேரத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வலம் வருகின்றன. பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின், இரவு நேரங்களில் தனிநபர்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துகின்றனர். எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில் இரும்பு கேட் அமைக்க, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ