மே., 22ல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
செங்கல்பட்டு:ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் மே 22ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான, ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், மே 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது.ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டை மூன்று நகல்களில், செங்கல்பட்டு கலெக்டருக்கு, வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.