உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்கள் நலன்காக்கும் கூட்டம் 389 மனுக்கள் ஏற்பு

மக்கள் நலன்காக்கும் கூட்டம் 389 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் நலன்காக்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 389 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 389 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு, பணி நியமன ஆணையை, கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி