மேலும் செய்திகள்
பழுதான குடிநீர் தொட்டி சீரமைக்க கோரிக்கை
23-Mar-2025
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட முட்டுக்காடு கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள அரசுப்பள்ளி அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி இருந்தது. கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலமாக மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.மேல்நிலைத் தேக்கத் தொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து, தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், பழைய மேல்நிலை தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டு, மின்மோட்டாரில் நேரடியாக குழாய்கள் இணைக்கப்பட்டு தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இதனால் உயர்மட்டத்தில் உள்ள குழாய்களுக்கு சரியாக தண்ணீர் செல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ஆகையால் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, முட்டுக்காடு கிராமத்தில் புதிய மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.
23-Mar-2025