வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் புதிதாக அமைக்க கோரிக்கை
மதுராந்தகம்:வீராணக்குன்னம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராணக்குன்னம் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு, வீராணக்குன்னம் -- கீழ்பட்டு செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, கட்டடம் பழமையானதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதனால், கிராம நிர்வாக ஆவணங்கள், பதிவேடுகளை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில், புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைத்து தர வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.